40 விபத்துகளை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - இயக்குநரிடம் காவல்துறை வைத்த வேண்டுகோள்
அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று 40க்கும் மேற்பட்ட வாகன விபத்துகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அனுஷ்கா ஷெட்டி
2006 ஆம் ஆண்டு மாதவனின் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அனுஷ்கா.
தற்போது க்ரிஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவான காதி என்ற தெலுங்கு திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
40 விபத்துகள்
முன்னதாக இயக்குநர் க்ரிஷ், அனுஷ்காவை வைத்து வேதம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழில் வானம் என்ற பெயரில் வெளியானது.
வேதம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த படம் வெளியாகும் முன்னர் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "வேதம் பட விளம்பரத்திற்காக அனுஷ்காவின் பட பேனர் ஒன்றை ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில் வைத்தோம்.
ஓட்டுநர்கள் அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டியதால் 40க்கும் மேற்பட்ட விபத்துகள் அந்த பகுதியில் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் பேனரை அகற்றுமாறு கூறியதையடுத்து அங்கிருந்து நீக்கினோம்." என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |