8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்த 40 வயது ஆசிரியர்.., அதிர்ச்சி சம்பவம்
8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியரின் புகைப்படம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி புகைப்படம்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 40 வயது பள்ளி ஆசிரியர் திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தில் பள்ளி ஆசிரியரின் தற்போதைய மனைவி என்று கூறப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று கூறிய போதும் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |