பிரித்தானியாவில் 41 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா! வெளியான பரபரப்பு தகவல்
பிரித்தானியாவில் 41 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘டெல்டா பிளஸ்’ கொரோனா மாறுபாடு இப்போது இந்திய அரசாங்கத்திற்கும் அறிவியல் சமூகத்திற்கும் ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவில் 41 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாறுபாடுகள் குறித்து இங்கிலாந்து பொது சுகாதாரம் சமீபத்தல் வெளியிட்ட அறிக்கையில், பிரித்தானியாவில் உறுதிப்படுத்தப்பட்ட 75,953 டெல்டா தொற்றுகளில் 41 பேருக்கு டெல்டா பிளஸ் மாறுபாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.