பிரித்தானியாவில் 45,000 பேருக்கு கொரோனா இல்லை என தவறான முடிவு வழங்கிய ஆய்வகம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை
பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45,000 பேருக்கு தொற்று பாதிப்பில்லை என ஆய்வகம் தவறான முடிவு வழங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Wolverhampton-ல் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகமே இவ்வாறு தவறான முடிவுகளை வழங்கியுள்ளது.
இதனையடுத்து, Immensa Health Clinic Ltd ஆய்வகத்தில் அனைத்து செயல்பாடுகளையும் NHS தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
Lateral Flow சோதனையில் தொற்று இருப்பதாக உறுதியான பலருக்கு Immensa Health Clinic Ltd ஆய்கவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.
இவ்வாறு ஏறுக்குமாறான முடிவு கிடைத்த மக்கள் பலர் இதுகுறித்து NHS-ல் புகார் அளித்துள்ளனர்.
புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியில் கிட்டதட்ட 45,000, பேருக்கு தொற்று பாதிப்பில்லை என ஆய்வகம் தவறான முடிவு வழங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுமார் 4 லட்சம் மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் பெரும்பாலனோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வழங்கப்பட்டதாக NHS மதிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 12 வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் கிட்டதட்ட 45,000 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தவறான முடிவு வழங்கப்பட்டதாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோருக்கு தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மற்றொரு கொரோனா பரிசோதனை எடுக்குமாறு NHS வலியுறுத்தியுள்ளது.
இந்த ஒரே ஒரு ஆய்வகத்தில் மட்டும் தான் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.