புல் வெட்ட செல்கிறேன் என பெருமையாக பதிவு: கோடிக்கணக்கிலான கஞ்சாவுடன் சிக்கிய பிரித்தானிய பெண்
பிரித்தானியப் பெண்ணொருவர் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தும்போது பிடிபட்டார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 45 வயது பெண் 5,00,000 பவுண்ட் மதிப்புள்ள தாய்லாந்து கஞ்சாவை கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
பிரித்தானியப் பெண்
45 வயதான ஏமி ஜேன் டர்பன் என்ற பிரித்தானியப் பெண் தாய்லாந்திற்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "புல் வெட்ட வீட்டிற்கு செல்கிறேன் - நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்தால் சரி. எப்போது வருவேன் என்ற நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே உங்கள் புல்வெளிக்கு நான் எப்போது வரப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது" என பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது கிளாஸ் பி வகையைச் சேர்ந்த போதைப்பொருள் நிரப்பப்பட்ட இரண்டு சூட்கேஸ்களில் 51.2 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் சந்தை மதிப்பு 5,12,000 பவுண்ட் எனவும் தெரிய வந்துள்ளது.
பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், தேசிய குற்றவியல் முகமையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
கஞ்சா கடத்திய குற்றம்
Uxbridge மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் கஞ்சா கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏமி, வியாழக்கிழமை அன்று காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி அன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது.
தேசிய குற்றவியல் தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானியாவிற்குள் கஞ்சாவைக் கடத்த முயலும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே, பிரித்தானிய விமான நிலையங்களில் 600 கடத்தல்காரர்கள்கைது செய்யப்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று NCA தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |