ஜேர்மனியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 49 யூரோ பயணச்சீட்டு
ஜேர்மனி அறிமுகம் செய்த 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
D-Ticket
கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அந்த பயணச்சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்பட்டது.
இந்த ஆண்டு, மே மாதம், மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு ஆகும் செலவு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே.
இந்த பயணச்சீட்டு, D-Ticket அதாவது Deutschlandticket என்று அழைக்கப்படுகிறது.
பெரும் வெற்றி
அந்த 49 யூரோ பயணச்சீட்டுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய ரயில்வேயைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே சார்ந்த அதிகாரியான Evelyn Palla என்பவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது, 49 யூரோ பயணச்சீட்டு ஏற்கனவே பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றார் அவர்.
அத்துடன், ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சரான Volker Wissingம், 49 யூரோ பயணச்சீட்டு உண்மையாகவே மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |