ஜேர்மன் நகரமொன்றில் வீட்டிலிருந்து தப்பிய 5 அடி நீள பாம்பு: பொலிசார் எச்சரிக்கை
ஜேர்மன் நகரமொன்றில் வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட பாம்பு ஒன்று தப்பிவிட்டது.
அந்த பாம்பைக் கண்டால் பிடிக்க முயற்சிக்கவேண்டாம் என பொலிசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
ஜேர்மன் நகரமான Insheimஇல் உள்ள வீடு ஒன்றில், 5 அடி 7 அங்குல நீளமுடைய பாம்பு ஒன்றை ஒருவர் வளர்த்துவந்துள்ளார்.
அது boa constrictor என்னும் ஒருவகை மலைப்பாம்பு ஆகும். சமீபத்தில் அந்த பாம்பு கூரையில் ஏறி வெளியே தப்பிவிட்டது.
அந்த பாம்பின் உரிமையாளரின் வீடு மற்றும் அதற்கு அருகில், தோட்டங்களும் வயல்களும் உள்ளதால் வனத்துறை அதிகாரிகளால் அந்தப் பாம்பை இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
அந்தப் பாம்பை யாராவது பார்த்தால், எக்காரணம் கொண்டும் அதைப் பிடிக்க முயற்சிக்கவேண்டாம் என எச்சரித்துள்ள பொலிசார், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.