இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 காலை பழக்கங்கள்.., என்ன தெரியுமா?
காலை நேரத்தில் செய்யும் சில பழக்கங்கள் நமது உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, சில மோசமான காலை பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகாலை நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சில காலை பழக்கங்களை தவிர்ப்பது அவசியம்.
அந்தவகையில், இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 மோசமான காலை பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

1. போதுமான நீர் குடிக்காமல் இருப்பது
உடலில் நீரிழப்பு ஏற்படும் போது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இரத்தம் அடர்த்தியாகி இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
2. வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வது
காலையில் சில நிமிடங்கள் வார்ம்-அப் செய்த பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் இதயத்துக்கு திடீர் அழுத்தம் ஏற்படலாம்.
3. இரத்த அழுத்தத்தை கவனிக்காமல் இருப்பது
காலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருவது அவசியம்.
4. அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது
அதிகளவில் உப்பு மற்றும் கலோரி கொண்ட துரித உணவுகளை காலையில் சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும், அதிக சோடியம் கொண்ட உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
5. காலை உணவை தவிர்ப்பது
காலை உணவை தவிர்ப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |