மாரடைப்பு வருவதை எச்சரிக்கும் முக்கிய 5 அறிகுறிகள்.., என்ன தெரியுமா?
இதயத்தின் பகுதிகளுக்குக் இரத்தஓட்டம் தடைப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினால் தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு வருகின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும் முன் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.
அந்த அறிகுறிகளை உணர்ந்து முன்கூட்டியே போதுமான மருத்துவ வசதி எடுத்துக்கொண்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
அந்தவகையில், மாரடைப்பு வருவதற்கான முக்கியமான 5 அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள்?
வலிமிக்க கட்டிகள்- விரல்கள் அல்லது கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
உதடு வெடிப்புகள்- உதடு வறண்டு போய் இரத்தக்கசிவு ஏற்பட்டால் இதய நோய் போன்ற கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
வளைந்த நகங்கள்- ஒருவரது விரல் நகங்கள் முன்பக்கமாக வளைந்து, விரல்களின் முனைப்பகுதி வீங்கி இருந்தால், இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது.
சருமத்தில் வளர்ச்சி- சருமத்தில் மஞ்சள் நிற மெழுகு போன்று ஏதேனும் வளர்ச்சியைக் கண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கும்.
கால் வீக்கம்- கால்கள் மற்றும் பாதங்களில் திடீரென்று வீக்கம் உண்டானால் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |