கண்களை சுற்றி கருவளையம் அதிகமாக இருக்கா? இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம்?
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களில் கருவளையம் ஏற்படுவது.
ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன.
கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் முகத்தின் அழகை முழுவதும் கெடுத்துவிடும். இருப்பினும் இந்த கருவளையம் பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மிக எளிமையான முறையில் சரி செய்துவிட முடியும்.
அந்தவகையில் கண்களை சுற்றி வரும் கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்று பார்ப்போம்.
- உருளைக்கிழங்கின் மேல் தோலை எடுத்து விட்டு அதனை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.
- புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.
- மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல செய்து கண்களின் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.
- கற்றாழையை எடுத்து அதனுள் உள்ள ஜெல்-ஐ எடுத்து நம்முடைய கண்களில் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- எலுமிச்சை சாறை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு நம் கண்களுக்கு மேல தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் நீங்கும்.
- க்ரீன் டீ பேக் ஐ எடுத்து தண்ணீரில் உற வைத்து பின் அந்த க்ரீன் டீ பேக் ஐ கண்களில் மேல் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இதன் மூலம் கருவளையம் நீங்கும்.
- சுத்தமான செக்கு விளக்கெண்ணெய்யை இரவு தூங்கும் முன்பு இரண்டு துளிகள் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறைந்து விடும்.
- சிறு துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.
- கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழி முறைகள் கண்களை சுற்றி கருவளையங்கள் வர விடாமல் தடுக்கும்.
- தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.