சிம்மத்தில் ஏறிய புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
அந்தவகையில், புதன் பகவான் 25 பிப்ரவரி 2025 அன்று மாலை 6:15 மணிக்கு கும்பத்தில் புதன் உதயமாக உள்ளார்.
மேலும், சூரிய பகவான் பிப்ரவரி 13ஆம் திகதி கும்ப ராசிக்குள் நுழைந்த நிலையில் புத ஆதித்யயோகமும் இதோடு இணைந்துள்ளது.
இந்நிலையில் புதன் பகவானின் உதயத்தால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
நிதி நெருக்கடி, குடும்பத்தில் சச்சரவு அல்லது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்த ரிஷப ராசியினர்கள் புதனின் உதயத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள். படிப்பில் சிக்கல்களைச் சந்திக்கும் மாணவர்கள் இப்போது அதிலிருந்து விடுபடுவார்கள். காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.
மிதுனம்
புதனின் உதயம் மிதுன ராசியினருக்கு நல்ல செய்திகளைத் தரும். பயணங்கள், உறவுகள் மற்றும் தொழிலில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். தொலைதூரப் பயணத்திற்கான திட்டங்களைத் தீட்டலாம். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். இதனால், நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். புதனின் உதயம் அவர்களுக்கு இந்தச் சச்சரவில் இருந்து வெளிவர வழி திறக்கும்.
சிம்மம்
புதனின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு, நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார நிலை மேம்படும். கடந்த கால நிதி பிரச்சனைகள் நீங்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரம் முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த தொடர்பு ஏற்படும்.
கன்னி
புதனின் உதயம் காரணமாக, கன்னி ராசியினர் ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் அனுபவிப்பார்கள். வேலையில், தொழில் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் நிம்மதி அடைந்து முன்னேறுவார்கள். சட்ட மோதல்கள் அல்லது சிக்கலான விஷயங்களில் இருந்து விடுபடலாம். சேவைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு நேரம் நல்லது, ஆனால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். கவனக்குறைவு நோயை ஏற்படுத்தும்.
கும்பம்
புதனின் உதயம் கும்ப ராசியினருக்கு மிகவும் நல்ல செய்தியை தந்துள்ளது. இந்த வேலை, கல்வி, காதல், குடும்பம் மற்றும் தொழில் ஆகிய அனைத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். காதலர்களுக்கிடையேயான உறவு மேலும் வலுவடையும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் புதனின் அருளால் எதிர்மறை விளைவுகள் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |