50 பில்லியன் டொலர் மதிப்புள்ள எண்ணெய் இழப்புக்கு காரணமான ஈரான் போர்
சுமார் 50 நாட்களுக்கு முன்பு ஈரான் போர் தொடங்கியதிலிருந்து உற்பத்தி தடைபட்டதால், உலகம் 50 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள கச்சா எண்ணெயை இழந்துள்ளது.
500 மில்லியன்
ஆய்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்த நெருக்கடியின் பின்விளைவுகள் வரும் மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளுக்குக் கூட உணரப்படும் என்றே தெரிய வருகிறது.

லெபனானில் ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனிடையே, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வெளியான தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாத இறுதியில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, 500 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் கண்டன்சேட் ஆகியவை உலகச் சந்தையில் விற்பனைக்கு வரவில்லை.
இது நவீன வரலாற்றின் மிகப்பெரிய எரிசக்தி விநியோகத் தடை என்றே கூறுகின்றனர். சந்தைக்குக் கிடைக்காமல் போன 500 மில்லியன் பீப்பாய் எண்ணெய் என்பது, உலகளவில் விமானப் போக்குவரத்துக்கான தேவையை 10 வாரங்களுக்குக் குறைக்கும்.
உலகம் முழுவதும் 11 நாட்களுக்கு வாகனத்தின் மூலம் சாலைப் பயணம் இல்லை அல்லது உலகப் பொருளாதாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு எண்ணெய் இல்லை.
இந்த 500 மில்லியன் பீப்பாய் எண்ணெய் என்பது அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கான எண்ணெய் தேவை அல்லது ஐரோப்பா முழுவதற்கும் ஒரு மாதத்திற்கும் மேலான அதன் எண்ணெய் தேவை என்றே கூறுகின்றனர்.

மேலும், ஆண்டுக்கு சுமார் 80 மில்லியன் பீப்பாய்கள் என்ற பயன்பாட்டு அளவின் அடிப்படையில், அமெரிக்க இராணுவத்தின் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கான எரிபொருள் நுகர்வு இந்த 500 மில்லியன் பீப்பாய்.
இழப்பு 50 பில்லியன்
உலகின் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையை சுமார் நான்கு மாதங்களுக்கு இயக்குவதற்குப் போதுமான எரிபொருள் இது. ஈரான் போரால் மார்ச் மாதத்தில் வளைகுடா அரபு நாடுகள் ஒரு நாளைக்கு சுமார் 8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை இழந்தன.
சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து விமான எரிபொருள் ஏற்றுமதி, பிப்ரவரியில் சுமார் 19.6 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதுவரை சேர்த்து வெறும் 4.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
ஏற்றுமதியில் ஏற்பட்ட இழப்பானது, நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கும் லண்டன் ஹீத்ரோவிற்கும் இடையே சுமார் 20,000 இருவழி விமானப் பயணங்களை இயக்குவதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்.

மோதல் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 100 டொலராக சராசரியாக இருந்து வருவதால், அந்த விற்பனைக் குறைவால் ஏற்படும் வருவாய் இழப்பு தோராயமாக 50 பில்லியன் டொலராகும்.
இது ஜேர்மனியின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதக் குறைப்பிற்குச் சமமாகும்; அல்லது, லாத்வியா அல்லது எஸ்டோனியா போன்ற சிறிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முழுவதற்கும் ஏறக்குறைய இணையானதாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |