கால்வாயில் கட்டு கட்டாக சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகள்! பின்னணி என்ன? வைரல் புகைப்படம்
இந்தியாவில் கால்வாய் ஒன்றில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மேட்டூர் சாலையில் இருக்கும் கால்வாய்களை தூய்மைப் பணியாளர்களான சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு சுமார் நூற்றுக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்துள்ளது.
மேலும் அந்த ருபாய் நோட்டுக்களை கைப்பற்றிய பணியாளர்கள் உடனே அதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். வருகின்ற 19ஆம் திகதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பல விதிமுறைகள் அமலில் இருக்கிறது.
எனவே உரிய ஆவணம் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஒருவேளை கால்வாயில் இருந்த இந்த ருபாய் நோட்டுக்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா அல்லது வேறு யாருடைய பணமாவது கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டதா என்ற கண்ணோட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.