550 கிலோ எடையுடன் சிக்கிய அரிய வகை மீன்!
இந்தியாவில் மீனவர் ஒருவரின் வலையில் 550 கிலோ எடை கொண்ட மீன் மாட்டிக்கொள்ள ஒரேநாளில் லட்சாதிபதியாகி இருக்கிறார்.
ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது மீனவர் ஒருவரின் விலையில் அதிக எடை கொண்ட மீன் ஒன்று சிக்கியது.
உடனடியாக மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீனை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அரியவகை மீன்
அப்போது தான் வலையில் சிக்கியிருந்தது அரிய வகை மீனான செய்லர் மார்லின் மீன் என்பதும், சுமார் 550 கிலோ எடையில் இருந்ததும் தெரியவந்தது.
மார்லின்கள் இஸ்டியோபோரிடே குடும்பத்தை சேர்ந்த மீனில் சுமார் 10 இனங்கள் உள்ளன, அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த மீனை வாங்க பலரும் போட்டி போட்டனர்.
கடைசியில் 1 லட்சத்துக்கு ஒருவர் ஏலத்தில் எடுக்க மீனவர்கள் உற்சாகமாகினர்.