32வது திருமணநாளை கொண்டாடிய தம்பதி..சில நாட்களில் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவில் நபர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
32வது திருமணநாள்
அமெரிக்காவின் உட்டா (Utah) பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒலின் ஜான்சன் (57), கெரிலின் (52).
இவர்கள் சமீபத்தில் தங்களது 32வது திருமணநாளை கொண்டாடினர். கெரிலின் கடந்த 2 ஆண்டுகளாக இசை பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஒலின் ஜான்சன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.
பேஸ்புக் பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். ஆனால் கொலைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை.
எனினும் ஒலின் ஜான்சனின் கடைசி பேஸ்புக் பதிவு அவரது மனநலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியது. மேலும், இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு அண்டை வீட்டாருடன் ஒலின் மற்றும் அவரது மனைவி இருவரும் Softball விளையாட்டு விளையாடியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் தம்பதிக்குள் எந்தவித பிரச்சனையை கவனிக்கவில்லை என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |