தமிழகத்தை உலுக்கிய சிவசங்கர் பாபா விவகாரம்! அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பாய்ந்தது
சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சிபிசிஐடி பொலிசார் பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கினார்.
இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின்னர் மேலும் சில மாணவிகள் சிவசங்கர் பாபா மீது புகார் கொடுத்தனர். அவர் மீது தொடர்ந்து பாலியல் புகார் வந்த வண்ணம் இருந்த நிலையில் இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவர் மீது மொத்தமாக 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 5-வது போக்சோ வழக்கை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.