6 பந்துக்கு 6 சிக்ஸர் அடிக்கனும்! இது தான் என் ஆசை: மும்பை வீரரின் தீராத வெறி
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், கடந்த 19-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் க்ருணல் பாண்ட்யா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் குறிப்பாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்றால், அது என்ன சாதனையாக இருக்கும் என்று கேட்க, அதற்கு உடனடியாக க்ருணல் பாண்ட்யா ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது என்று கூறினார்.
இதற்கு முன்பு, இந்த சாதனையை முதன்முதலில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அடித்தார்.
அதன்பின் யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.