அரசு மருத்துவமனையில் தவறான ரத்தம் செலுத்தியதில் 6 குழந்தைகளுக்கு HIV தொற்று
மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் செலுத்தப்பட்ட ரத்தம் மூலம் HIV தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
குழந்தைகளுக்கு HIV தொற்று
மத்தியபிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட ஆறு குழந்தைகளுக்கு HIV தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு HIV தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |