தந்தை கண்ணெதிரில் 6 வயது மகளுக்கு நடந்த பயங்கரம்!
பிரித்தானியாவில் தந்தை கைப்பிடித்து சாலையில் நடந்த சென்ற 6 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இங்கிலாந்தில் Stoke-on-Trent நகரத்தில் உள்ள Endon சாலையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ஆறு வயது சிறுமி தனது தந்தையுடன் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்ததாகவும், அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் இருவர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் சிறுமி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார், சாலையில் இருந்தவர்கள் உதவி செய்ய முயன்றபோதிலும் அவர் சம்பவ இடத்திலேயே தந்தை கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தைக்கு பலமாக அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், விபத்துக்குள்ளான அந்த காரை ஓட்டிவந்த நபரும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த விபத்து குறித்து பேசிய ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் லீ ராபின்சன், "என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் புரியவில்லை, எனவே நாங்கள் விசாரிக்கும் போது இப்பகுதியைத் தவிர்க்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து சூழ்நிலைகள் குறித்து ஊகிக்க வேண்டாம்" என்று கூறினார்.
மேலும், "இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சிகள் அல்லது சிசிடிவி அல்லது டாஷ்கேம் காட்சிகள் ஏதேனும் இருந்தால் காவல்துறையை தொடர்பு கொண்டு விசாரணைகளுக்கு உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.