6 வயதில்.. பிரிட்டன் பிரதமரின் விருதை பெற்று சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுமி
இங்கிலாந்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 6 வயது இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரிட்டன் பிரதமர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையரின் மேற்கு பிரிட்ஜ்போர்டில் வசித்து வருபவர் அலிஷா காதியா(6). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி. இவர் புவி வெப்பமடைதல் மற்றும் காடழிப்பு விழிப்புணர்வு NGOவில் உறுப்பினராக உள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் non profit Cool Earth என்ற நிறுவனத்துக்காக அலிஷா காதியா இதுவரை 3,000 பவுண்டுகளை திரட்டியுள்ளார்.
அந்தவகையில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்காக இவருக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் என்ற விருதை பெற்றுள்ளார்.
அந்த விழிப்புணர்வில் குழந்தைகள், பெற்றோர்களுக்கு காடு வளர்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளார். சுற்றுசூழலை பற்றி அக்கறை கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சுமார் 80 கிமீ சைக்கிளில் பயணம் செய்து பருவநிலை மாற்றத்தை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தனது 6 வயதிலே சுற்றுசூழல் மீது அக்கறை கொண்ட அலிஷா காதியாவுக்கு உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் டேவிட் அட்டன் பாரோ பாராட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அலிஷா கூறியது, இந்த விருது எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இதுவரை பிரிட்டிஷ் PM பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதை அலிஷா உட்பட 1,755 நபர்கள் பெற்றுள்ளார்.