110 அடியில் இருந்து விழுந்து துடி துடித்து இறந்த குழந்தை! த்ரில்லை அனுபவிக்க நினைத்து நடந்த துயர சம்பவம்: எச்சரிக்கை செய்தி
அமெரிக்காவில் தீம் பார்க்கிற்கு குடும்பத்தினருடன் சென்ற குழந்தை அங்கு சவாரி செய்த போது 110 அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் Colorado-வில் இருக்கும் Glenwood Caverns Adventure பூங்காவிற்கு, கடந்த ஞாயிற்றுக் கிழமை Wongel Estifanos என்ற 6 வயது சிறுமி தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அங்கிருந்த பொழுது போக்கிற்காக இருந்த பல ride-களுக்கு சென்ற சிறுமி, அங்கு மிகவும் பிரபலமான Haunted Mine Drop ride(குகைக்குள் செல்வது போன்று)-ல் சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று சிறுமியின் பாதுகாப்பு பெல்ட் சரியில்லாமல், போனதால், சிறுமி சுமார் 110 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த சிறுமியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்காக GoFundMe பக்கத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதில், எங்கள் சகோதரர் Estifanos மற்றும் சகோதரி Rahel குடும்பத்தினர் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக குறித்த தீம் பார்க்கிற்க்கு கடந்த 5-ஆம் திகதி சென்றிருந்தனர்.
அப்போது அவர்கள் மேற்கொண்ட Mine Drop Ride-ல் அவர்களின் அழகிய மகளான Wongel Estifanos, தவறி கீழே விழுந்ததால், பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது பெற்றோர், மற்றும் உறவினர்கள் இந்த துயர மற்றும் திடீர் இழப்பால் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.
சிந்திக்க முடியாத இழப்பின் போது அனைத்து சமூகமும், இவர்களின் குடும்பத்துடன் நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் என்ன செய்தாலும், அவர்களின் மகள் திரும்பி வரப்போவதில்லை, இருப்பினும், அவர்களுக்கு இந்த சமயத்தில் நம்மால் எந்த உதவி செய்ய முடியுமோ அந்த உதவி செய்வோம்.
குறிப்பாக, சிறுமியின் இறுதிச் செலவு மற்றும் பிற செலவுகளை ஈடுசெய்ய, நாம் செய்யும் உதவி அவர்களுக்கு உதவும். இதுவரை சுமார் 20,000 பவுண்ட் நிதியாக கிடைத்துள்ளது. இது சிறுமியின் இறுதிச்சடங்கிற்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தால், நாங்கள் மிகுந்த வருத்ததில் உள்ளோம், வரும் வெள்ளிக் கிழமை வரை பூங்கா மூடப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளது, மேலும், இது குறித்து பூங்காவிற்கு சென்ற நபர்கல் சிலர் இந்த சவாரி குறித்து இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், குறிப்பிட்ட அந்த சவாரியின் போது, கொடுக்கப்படும் பெல்ட் இறுக்கமாகவே இலை, இதுவே சிறுமியின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த சவாரியில் சென்ற மற்றொரு நபர், நான் கடந்த ஜுன் மாதம் இதே சவாரி செய்தேன். அப்போது பெல்ட் இறுக்கமாகவே இல்லை, நான் வெளியில் வருவது போன்று எனக்கு தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிறுமியின் மரணத்தை தொடர்ந்து, குறித்த பூங்காவில் ஆய்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.