பிரித்தானியா வரும் ட்ரம்ப்... விண்ட்சர் மாளிகையைச் சுற்றி ஏழு அடி உயர வேலி அமைப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது மனைவியான மெலானியாவுடன் நாளை பிரித்தானியாவுக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.
ட்ரம்பின் வருகையை ஒட்டி பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
ஏழு அடி உயர வேலி அமைப்பு
நாளைய விஜயத்தின்போது ட்ரம்ப் தம்பதியரை வாழ்த்த பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் தம்பதியர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் விண்ட்சர் மாளிகைக்குள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் ட்ரம்பைக் கொலை செய்ய முயற்சி நடந்ததைத் தொடர்ந்தே பிரித்தானியாவில் இத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ட்ரம்ப் தம்பதியர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கும் விண்ட்சர் மாளிகை முழுவதையும் சுற்றி, ஏழு அடி உயர வேலி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |