இலங்கைக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகல்!
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஜூலை 27ம் திகதி நடைபெறவிருந்த இலங்கை-இந்தியா இடையேயான 2வது டி-20 போட்டி இன்று ஜூலை 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொற்று உறுதியானதை தொடர்ந்து குர்ணல் பாண்டியா தனிமைப்படுத்துப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குர்ணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த இந்தியா வீரர்கள் 7 பேர் இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி-20 போட்டியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், கிருஷ்ணப்ப கௌதம், பாடிக்கல் உட்பட பெயர் வெளியிடப்படாத மற்றொரு வீரரும் டி-20 தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இளம் வீரர்களுடன் இந்திய அணி 2வது டி-20 போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.