ஜேர்மன் சாலையில் அகதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்: சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி
ஜேர்மனியில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்குள்ளான வேன்
ஜேர்மனியின் கிழக்கு முனிச் நகரில் முஹல்டோர்ப் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேன் ஒன்று வேகமாக சென்றுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த சோதனை சாவடி ஒன்றில் இருந்த பொலிஸார் வேனை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் வேன் சாரதி வண்டியை நிறுத்தாமல் சோதனை சாவடியை வேகமாக கடக்க முயற்சித்துள்ளார்.
AP
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையிலேயே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதை தொடர்ந்து வேன் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது.
பரிபோன 7 உயிர்கள்
வேனில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பயணித்த நிலையில், இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த பலர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேனில் பயணித்த 20 பேரும் அகதிகள் என்றும், அவர்கள் ஜேர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று இதுவரை தெரியவில்லை, அது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.