என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல்

Accident Chennai
By Fathima Mar 30, 2022 12:41 AM GMT
Report

சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள்.

இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.  

எதிர்பாராத விபத்து

நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான்.

வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான்.

அப்போது ஓட்டுநர் பூங்காவனம், வேனை பார்க்கிங் செய்வதற்காக பின்னோக்கி இயக்கியுள்ளார்.  

அப்போது, மாணவன் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியுள்ளது. இதில், வேனின்பின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.  

என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல் | 7 Year Old Boy Killed In School Bus Accident

64 வயதான ஓட்டுநரால் நேர்ந்த விபரீதம்

வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகனப் பெண் பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணையில், 64 வயதான ஓட்டுநர் பூங்காவனத்திற்கு ஒரு பக்க காது கேட்காது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மாநகராட்சி வாகன ஓட்டுநராக இருந்துவிட்டு ஓய்வுக்குப் பின்னர் இந்தப் பள்ளியில் ஓட்டுநராகச் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பள்ளி வாகனங்களுக்கு தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்படாதது ஏன்? 64 வயதானவரை வாகன ஓட்டுநராக நியமித்தது ஏன்? என்றும், வேன் மோதி சிறுவன் உயிரிழந்த நிலையில், பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல் | 7 Year Old Boy Killed In School Bus Accident

மேலும் பள்ளி வளாகத்திற்குள் உள்ள பேருந்து வழித்தடத்தில் வேகத்தடைகளை அமைக்காதது ஏன்? என்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை,

மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றடைந்தனரா என்பதை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது ஏன்? உள்ளிட்ட 6 கேள்விகளுக்கும் பள்ளி நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கதறி அழுத தாய் ஜெனிபர்

மருத்துவமனையில் மகனை பார்த்ததும் கதறிய ஜெனிபர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் என்னுடைய ஒரே மகனை இழந்து தவிக்கிறேன், அவனுக்கு 7 வயது தான் ஆகிறது.

பள்ளிக்கு அனுப்பிவிட்ட 10 நிமிடத்தில் விபத்து நடந்துவிட்டதாக போன் செய்தார்கள், நாங்கள் செல்வதற்குள் என் மகன் இறந்துவிட்டான்.

அவன் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது, என்ன நடந்தது என முழுமையாக தெரியவில்லை, அவனது வயிற்றில் வேன் ஏறி இறங்கியுள்ளது.

பள்ளி தாளாளரை கைது செய்தால் மட்டுமே உண்மை என்ன? என்பது தெரியவரும், அம்மான்னு கூப்பிட என் குழந்தை இல்லையே என கதறியுள்ளார்.

என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல் | 7 Year Old Boy Killed In School Bus Accident

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US