தன் மகனுக்காக 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை! உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தம்பதி

Kerala
By Sivaraj Oct 03, 2022 12:43 PM GMT
Report

30 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மகனுக்காக பழி வாங்கிய தந்தை

தனக்கு நீதி கிடைக்கவில்லை என சசிதரன் தம்பதியை பெட்ரோல் ஊற்றி எரித்தார்

இந்திய மாநிலம் கேரளாவில் மகனின் மரணத்திற்கு பழி வாங்க, 30 ஆண்டுகளுக்கு பின் கணவன் - மனைவியை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி அலைந்துள்ளார்.

ஒரு வழியாக அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் குரூப் (60) என்பவர் சசிதரனின் மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையையும் அவரிடம் இருந்து பிரபாகரன் பெற்றுள்ளார்.

கிளார்க் வேலை தயாராக இருப்பதாக கூறி ரமேஷை பஹ்ரைனுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். ஆனால், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டது பணியாள் வேலை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

உடனே பிரபாகரனை சந்தித்து இதுகுறித்து சசிதரன் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

தங்கள் ஒரே மகனை இழந்ததால் சோகத்தில் இருந்த சசிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் 29 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. தனக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த சசிதரனுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது.

பிரபாகரன் மீது தவறு இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மனம் நொறுங்கிப்போன சசிதரன் விபரீத முடிவை எடுத்தார். பிரபாகரனை சரமாரியாக சுத்தியலால் தாக்கிய அவர், பெட்ரோலை எடுத்து பிரபாகரன் மற்றும் அவரது மனைவி விமலா குமாரி இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார். இருவரும் தீப்பற்றியதில் அலறித் துடித்தனர்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து தம்பதியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். பிரபாகரன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US