70 வயதில் மசாலா பொரி விற்று குடும்பத்தை காப்பாற்றும் முதியவர்! ஒரு சுவாரஸ்ய தகவல்
இந்தியாவில் முதியவர் ஒருவர் மசாலா பொரி விற்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
நாக்பூரில் வசித்து வருபவர் ஜெயந்தி பாய். 70 வயது மதிக்கதக்க இவர் நாக்பூரில் உள்ள இத்வாரி மற்றும் காந்திபாக் தெருக்களில் சென்று பொரி விற்பனை செய்து வருகின்றார். சிலரது துவண்டுபோன வாழ்கையில் நம்பிக்கை ஊட்டும் மனிதர்கள் இருப்பதுண்டு.
அப்படி ஒருவர் தான் 70 வயதான நாக்பூரை சேர்ந்த ஜெயந்தி பாய் என்ற தாத்தா. இவர் தினமும் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது இணையவெளியில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் தாத்தா வெறும் 2 மணி நேரம் மட்டுமே உழைத்து வருகின்றார்.
மேலும் காலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். காவலாளி பணியில் கிடைக்கும் ஊதியத்தில் வீட்டு வாகை மற்றும் மருத்துவ செலவுக்கு போதாததால் பொரி விற்று வருகிறார் ஜெயந்தி பாய்.
இதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு செலவுகளை சமாளித்து வருகிறார். இவருக்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்துகொண்டிருப்பதாக அவர் புன்னைகையுடன் தெரிவித்துள்ளார்.