டெல்லி செங்கோட்டையில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வருகின்ற 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினத்திற்கு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9 வது முறையாக கொடியேற்றுகிறார்.
தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மூவண்ண வண்ணங்களில் பலூன்களை வானில் பறக்கவிடப்படும்.
இவ்விழாவில் நாடுமுழுவதும் இருந்து 1800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கோட்டையின் வாயில்களில் உள்ளே வெளியே என அணைத்து இடங்களிலும் பாதுகாப்பாக போலீசார் பலப்படுத்தி உள்ளனர். 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்காலிக கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பகின்றன.டெல்லியில் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை டிரோன்கள், பாராகிளைடிங் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டைப் பகுதியைச் சுற்றி இருக்கின்ற 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்களிலிருந்து தொலைநோக்கியுடன் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை ராணுவம் மற்றும் போலீசார் முக்கிய இடங்களில் கண்காணிக்க சென்று வருகிறார்கள். ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.இதையொட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
செங்கோட்டை,ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க வீரர்கள் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படை வீரர்கள் கம்பீரத்துடன் அணி வகுத்துச் சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |