ஒரே நாளில் 29 பேர் பலி! சென்னையில் 2,600... தமிழகத்தில் 8,000-ஐ நெருங்கியது கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 10ம் திகதி முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,987 ஆக அதிகரித்துள்ளது, 29 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் புதிதாக 2,558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 15) மொத்தம் 9,62,935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 8,91,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மொத்தம் 12,999 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.