குடல் புற்றுநோய் ஆபத்தை எச்சரிக்கும் 8 அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
புற்றுநோய் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
அந்தவகையில், குடல் புற்றுநோயை எச்சரிக்கும் 8 முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
குடலியக்கத்தில் மாற்றம்: காரணமின்றி தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மலக்குடலில் இரத்தக்கசிவு: மலம் கழிக்கும் போது இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அடிவயிற்று வலி: அடிவயிற்றில் பிடிப்பு, வாய்வு, உப்புசம் அல்லது வலி இருந்தால் அதை அலட்சியமாக விடாமல் மருத்துவரை பார்க்க வேண்டும்.
முழுமையடையாத குடல் அசைவு: மலம் கழித்த பிறகும் மீண்டும் கழிக்க வேண்டும் போல உணர்வு இருந்தால் அது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
உடல் சோர்வு: காரணமின்றி தொடர்ந்து அதிக சோர்வு மற்றும் பலவீனம் இருந்தால் கவனிக்க வேண்டும்.
எடை இழப்பு: உணவு அல்லது உடற்பயிற்சியில் மாற்றம் இல்லாமல் திடீரென எடை குறைந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாடு: நீண்ட காலமாக மலத்தில் இரத்தம் வந்தால் இரும்புச்சத்து குறைந்து இரத்த சோகை ஏற்படலாம்.
முதுகு வலி: காரணமின்றி நீண்ட நாட்கள் முதுகு வலி இருந்தாலும் அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |