11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 84 வயது முதியவர்! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 84 வயது முதியவர் ஒருவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரம்மதேவ் மண்டல். 84 வயது மதிக்கத்தக்க இவர் இதுவரை 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் 12வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற போது காவல் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். பிரம்மதேவ் மண்டல் தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 30ஆம் திகதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். 12வது முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தபோது பிடிப்பட்டார்.
8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
அவரிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது தடுப்பூசியால் அதிகம் பயனடைந்ததாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.