அவுஸ்திரேலியாவில் தவறுதலாக கடத்தப்பட்ட 85 வயது முதியவர்: பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 85 வயது முதியவர் ஒருவர் தவறுதலாக கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட 85 வயது முதியவர்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 85 வயது முதியவர் ஒருவர் தவறுதலாக கடத்தப்பட்டு இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வடக்கு ரைடு(North Ryde) பகுதியில் வசித்து வந்த 85 வயது கிரிஸ் பக்ஸாரியன் (Chris Baghsarian) என்ற நபர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.

கிரிஸ் பக்ஸாரியனை கருப்பு நிற எஸ்.யு.வி(SUV) ரக காரில் முகம் மறைக்கப்பட்ட மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வேண்டுகோள்
கிரிஸ் பக்ஸாரியன் கடத்தப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயல் என்றாலும், கடத்தல்காரர்கள் தவறுதலாக தங்கள் இலக்கை மாற்றி தேர்வு செய்து கடத்தி இருப்பதாக பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஆண்ட்ரூ மார்க்ஸ் வெளியிட்ட தகவலில், கடத்தல்காரர்கள் வேறு யாரையோ கடத்த திட்டமிட்டு தவறுதலாக 85 வயது முதியவரை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முதியவர் கடத்தப்பட்ட 85 நாட்கள் ஆன பிறகும், கடத்தல்காரர்கல் இதுவரை எந்தவொரு பணம் உள்ளிட்ட எந்தவொரு கோரிக்கையையும் முன்வைத்து அழைப்பு மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை எடுத்துக் கூறி, பொதுமக்கள் யாருக்கும் கிரிஸ் பக்ஸாரியன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |