லண்டனில் இந்த 9 பேரை வலை வீசி தேடி வரும் பொலிசார்! எதற்காக தெரியுமா? வெளியிட்ட புகைப்படம்
லண்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய போது, பொலிசார் சிலர் இரத்த காயங்களுடன் புகைப்படம் வெளியான நிலையில், 9 பேரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hyde Park அருகே, ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டகாரர்கள் வந்த போது, பொலிசார் அவர்களை கலைக்க முயன்றனர்.
இதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிசாருக்கிடையே மோதல் நிலவியது. இதில் போராட்டக்காரர்கள், பொலிசார் மீது பாட்டில்கள வீசத் துவங்கினர். இதனால், பொலிசார் பலர் காயமடைந்துள்ளனர்.
இதில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்றில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்ட அவர் இரத்த காயங்களுடன் இருந்தது.
இந்நிலையில், தற்போது Scotland Yard பொலிசார் சிலர் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களை தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளது, மேலும், கடந்த சனிக்கிழமை Hyde Park-ல் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்ற போது, அதிகாரிகள் மீது, ஆர்பாட்டக்காரர்கள் பாட்டில்களை வீசி வன்முறையில் இறங்கினர்.
இதில் 14 பொலிசார் காயமடைந்துள்ளனர். அதில் 5 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை தேடி வருவதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.