போர்க்களமாக மாறிய பெர்லின்; மே தின கலவரத்தில் 90-க்கும் மேற்பட்ட ஜேர்மன் பொலிஸ் படுகாயம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பாரம்பரிய மே தின பேரணிகள் வன்முறையாக மாறியதை அடுத்து 90-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக ஜேர்மன் காவல் துறை தெரிவித்துள்ளது.
பெர்லினில் சனிக்கிழமையன்று 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மே தின பேரணிகள் நடந்தன, அவற்றில் பெரும்பாலானவை அமைதியாக நடைபெற்றன.
ஆனால், கடந்த தசாப்தங்களில் அடிக்கடி மோதல்களைக் கண்ட நகரத்தின் Neukoelln மற்றும் Kreuzberg சுற்றுப்புறங்களில் 8,000 பேர் கொண்ட இடதுசாரி அணிவகுப்பு வன்முறையாக மாறியது.
அவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசினர், மற்றும் குப்பைத் தொட்டிகளையும் மரத் கட்டைகளையும் தெருக்களில் எரித்தனர்.
இதில் குறைந்தது 93 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேரணி கலவரமாக மாறிய நேரத்தில் வன்முறையில் ஈடுபட்ட 354 ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தற்போது ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளது. ஆனால், அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மதக் கூட்டங்கள் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
இதே போன்று, பிரான்சிலும் தலைநகர் பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் மே தின பிராணிகளில் கலவரங்கள் ஏற்பட்டது. அங்கும் பல பொலிஸார் மற்றும் 21 ஆர்ப்பாட்டக்காரர்களை படுகாயம் ஏற்பட்டுள்ளது. 56 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.