பிரித்தானியாவில் 99% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடவில்லை! ஆய்வில் தகவல்
பிரித்தானியாவில் கோவிட் -19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 99% க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போடவில்லை என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் மகப்பேறியியல் கண்காணிப்பு அமைப்பு (UKOSS) மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம்,
பிரித்தானியாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலானோர் கோவிட் -19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்துள்ளது.
இதுவரை 3,371 கர்ப்பிணிப் பெண்கள் தொற்று நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் டெல்டா மாறுபாடு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர்.
பிப்ரவரி 1, 2021 முதல் சேகரிக்கப்பட்ட தடுப்பூசி தரவுகளின்படி, அந்த தேதியில் இருந்து அனுமதிக்கப்பட்ட 742 பெண்களில், வெறும் 4 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதாகவும், அந்த நான்கு பேருக்கும் கூட முதல் டோஸ் மட்டுமே கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.