சீனாவுக்கு வர ஜேர்மன் சேன்ஸலருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் அழைப்பு: தலைவர்கள் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு...
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங், உலகத் தலைவர்கள் பலருக்கு சீனா வர அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு வர ஜேர்மன் சேன்ஸலருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விரண்டு நாடுகளின் தலைவர்களும் வித்தியாசமான முடிவுகளை எடுத்துள்ளார்கள்.
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங், உலகத் தலைவர்கள் பலருக்கு சீனா வர அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ், பாகிஸ்தான் பிரதமர், வியட்நாம், தான்சானியா, வடகொரியா, கியூபா, கம்போடியா முதலான நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவின் அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் 3, 4 திகதிகளில் சீனா செல்கிறார் ஜேர்மன் சேன்ஸலரான ஷோல்ஸ். ஏற்கனவே ஜேர்மனியும் சீனாவும் வர்த்தக உறவுகளை அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜேர்மன் துறைமுகம் ஒன்றின் பங்குகள் சிலவற்றை சீன நிறுவனம் ஒன்றிற்கு ஜேர்மனி விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி சீன ஜேர்மன் உறவுகள் வலுப்பெற்றாலும், பிரான்ஸ் ஜனாதிபதியோ, சீனாவின் அழைப்பை ஏற்கமறுத்துவிட்டார். அது சீன தரப்புக்கு அவமதிப்பாக கருதப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.