நாட்டின் பயங்கர கிரிமினல் வழக்குகளை சந்தித்த ஜேர்மன் நீதிமன்றத்தில் வித்தியாசமான ஒரு வழக்கு
ஜேர்மனியின் பெடரல் உயர்நீதிமன்றம் மிக பயங்கர கிரிமினல் வழக்குகளையெல்லாம் சந்தித்துள்ளது. தீவிரவாதிகள், பொலிசாரைக் கொல்பவர்கள், கொலைகார பிஸினஸ்மேன்கள் என அதிபயங்கர வழக்குகளை சந்தித்த நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தித்த வழக்கு முற்றிலும் வித்தியாசமானது.
இப்படி ஒரு வழக்கை விசாரிக்கும்போது நீதிபதிகளும் மகிழ்ச்சியாக இருந்தார்களாம்... அப்படி என்ன வழக்கு அது? பெர்லினில் ஒருவர் வளர்த்த மரம் பக்கத்து வீட்டுத் தோட்டத்துக்குள் கிளைகளை விட்டுள்ளது.
ஆகவே, அந்த வீட்டுக்காரர் தன் வீட்டுத்தோட்டத்துக்குள் எட்டிப்பார்த்த கிளைகளை வெட்டிவிட்டார். உடனே, மரத்துக்கு சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் தன் மரத்திலுள்ள கிளைகளை வெட்டியதால், அது புயல் வரும்போது அடித்துச் செல்லப்பட வாய்ப்பு உள்ளது என்றும், தன் மரம் இறந்துவிடக்கூட வாய்ப்புள்ளது என்றும் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார்.
ஆனால், நீதிமன்றம் மரத்தை வெட்டியவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துவிட்டது.
ஜேர்மன் சிவில் சட்டத்தின்படி, தன் வீட்டுத்தோட்டத்துக்குள் நுழைந்த மரத்தை
வெட்ட அந்த வீட்டுக்காரருக்கு உரிமை உள்ளது என்று கூறிவிட்டது நீதிமன்றம்.