மின்சாரத்துக்காக ரஷ்யாவை எதிர்பார்ப்பதை தவிர்ப்பதற்காக ஜேர்மனி துவங்கியுள்ள வித்தியாசமான முயற்சி
ஆற்றல் அல்லது மின்சாரத்துக்காக ரஷ்யாவின் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்காக, ஜேர்மன் நிறுவனம் ஒன்று வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன்படி, கல்குவாரி ஏரி ஒன்றில், மிதக்கும் சோலார் தகடுகளை மிதக்கவிட்டு, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை BayWa r.e. என்னும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளது.
இந்த திட்டம், சோலார் தகடுகளை பதிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமலும், கச்சா எண்ணெய் போன்ற பொருட்கள் செலவழியாத வகையிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது.
மே மாதம் 24ஆம் திகதி இந்த திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தி துவங்க உள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், பொதுவாக நிலத்தில்தான் சோலார் தகடுகள் பதிக்கப்படும். அதனால், நிறைய இடத்தை அதற்காக ஒதுக்கவேண்டியிருக்கும்.
ஆனால், இந்த திட்டம் கல் குவாரி போன்ற இடங்களில் சேரும் தண்ணீரின் மேல் சோலார் தகடுகளை மிதக்கவிட்டு செய்யப்படுவதால், அவ்வளவு இடமும் மிச்சமாகும்.
அத்துடன், இத்திட்டத்தால், 1,100 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியீடும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
[1E9XKM ]