காணாமல் போன இளம்பெண்! உடலை துண்டு துண்டாக வெட்டி சாலையில் வீசிய கொடூரம்.. வெளியான பகீர் சம்பவம்
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மிசோரி மாகாணத்தில் பிரியானா ராபர்ட்ஸ் (21) என்ற இளைமப்பேன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் சில நாட்களாக காணாமல் போனதால் வரத்து குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
அந்த சமயத்தில் போலிங்கர் கவுண்டி பகுதியில் வேறொரு வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சென்றுள்ளனர். அப்போது அங்கு சாலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பொலிசார் சடலத்தை உடனடியாக கைப்பற்றி அடையாளம் கண்டு கொள்ள விசாரணை நடத்தினர். அதில் காணாமல் போன பிரியானாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவரை கடைசியாக தொடர்புகொண்ட எரிக் நானி, கெட்லின் மோர்கன் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட எரிக் நானியின் தந்தை மூவரையும் பொலிஸ் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற நோக்கத்தில் பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.