நடுரோட்டில் காரை நிறுத்தி இளம்பெண் செய்த அடாவடி! காரணமே இல்லாமல் இளைஞரை அறைந்தால் பரபரப்பு
பெண் ஒருவர் சாலையில் காரை நிறுத்தி டாக்சி டிரைவரை சரமாரியாக தாக்கும் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேசம் அவாத் பகுதியில் உள்ள சிக்கனலில் காரை நிறுத்திய இளம்பெண் பக்கத்தில் இருந்த டாக்சி ஓட்டுனரை திடீரென்று வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
உடனே இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கூட்டம் கூடி நெரிசல் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத அந்த பெண் இளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என பல முறை அறைந்துள்ளார்.
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates ? (@MeghUpdates) July 31, 2021
இதை தட்டி கேட்டவர்களிடமும் அந்த பெண் சண்டைக்கு பாய்ந்துள்ளார். இதனால் யாரும் தனக்கு எதுக்கு வம்பு என்பது போல் அமைதி காத்துவிட்டனர்.
எதற்கு அடிக்கிறீர்கள் என்று அந்த ஓட்டுநர் கேட்ட பொழுது கோவத்தில் அவரின் போனை பிடுங்கி கீழே போட்டு சுக்கு நூறாக உடைத்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அதுமட்டும் இல்லாமல் காரணமே இல்லாமல் ஓட்டுனரை தாக்கியதால் #ArrestLucknowGirl என்ற ஹாஷ்டாக் இளம் பெண்ணுக்கு எதிராக ட்விட்டரில் வலுக்க தொடங்கியுள்ளது.