ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்டமான வீடு இலவசம்: ஆனால்
ஜேர்மனி அரசு, பிரம்மாண்டமான வீடு ஒன்றை இலவசமாக தர முன்வந்துள்ளது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள யாரும் வந்ததுபோல் தெரியவில்லை.
ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வீடு இலவசம்
பெர்லினுக்கு வெளியே அமைந்திருக்கும் பிரம்மாண்ட வீடு ஒன்றை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது ஜேர்மனி அரசு. ஆனால், அதை யாரும் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
Image: Patrick Pleul/dpa/picture alliance
மக்கள் அந்த வீட்டை வாங்க தயங்குவதேன்?
Brandenburg மாகாணத்தில் அமைந்துள்ள அந்த வீடு, முன்னர் நாஸி அமைச்சரான ஜோசப் (Joseph Goebbels) என்பவர் வாழ்ந்த வீடாகும். 42 ஏக்கர் அளவிலான நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் ஜோசப் விடுமுறை நாட்களில் தன் மனைவி மற்றும் தன் ஆறு பிள்ளைகளுடன் தங்குவது வழக்கம். அத்துடன், அவரது ரகசிய காதலிகள் பலருடன் அவர் அந்த வீட்டில் தங்குவதுண்டாம்.
ஜோசப்பும் அவரது மனைவி பிள்ளைகளும், பெர்லினிலுள்ள பதுங்குகுழி ஒன்றில் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டபிறகு, அந்த வீடு ஒரு ராணுவ மருத்துவமனையாக செயல்பட்டுவந்துள்ளது. பெர்லின் சுவர் இடிப்புக்குப் பின் பல கைமாறி இப்போது அநாதரவாக விடப்பட்டுள்ளது.
Image: Christian Thiel/imago images
அது முன்னர் நாஸி அமைச்சர் ஒருவர் வாழ்ந்த வீடு என்பதுடன், அதை பராமரிக்க பெரும் தொகை செலவிடவேண்டியிருக்கும் என்பதாலும், அதை இலவசமாகக் கூட பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில், அப்படி யாரும் அந்த வீட்டைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லையானால், அதை இடித்துவிட முடிவு செய்துள்ளதாக பெர்லின் மாகாணங்கள் துறை நிதி அமைச்சரான Stefan Evers தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |