வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி- வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் நேற்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |