100 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட முதியவர்! குடும்பத்துடன் கொண்டாடும் வைரல் புகைப்படம்
மேற்கு வங்காளத்தில் 100 வயது முதியவர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்கார்(100). இவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் அவருக்கு சில ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.
பிஸ்வநாத்தின் 6 குழந்தைகள், 23 பேரக் குழந்தைகள் மற்றும் 10 கொள்ளு பேரக் குழந்தைகள் ஆகியோர் இணைந்து அவருக்கு மீண்டும் திருமண ஏற்பாடு செய்தனர். அதன் படி பிஸ்வநாத்திற்கும் அவரது 90 வயது மனைவியான சுரோத்வாணிக்கும் மிகவும் விமர்சிசையாக திருமணம் நடந்துள்ளது.
இந்த ஆலோசனை பற்றி வயதான தம்பதியினரின் மருமகள் கீதா சர்கார் கூறியதாவது, மீண்டும் திருமணம் செய்யும் இந்த ஐடியாவை, சமூக வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த ஆலோசனையை எனது குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன். அதற்கு அனைவரும் ஆதரவும் அளித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பாமுனியா கிராமத்திற்கு சென்று தன்னுடைய மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார் பிஸ்வநாத். குதிரையில் வந்த அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
பாரம்பரிய திருமண உடையில் இருந்த திருமண ஜோடி, பணத் தாள்களால் ஆன மாலையை மாற்றிக் கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.