லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன முதியவர்.. ஒரு சுவாரஸ்ய தகவல்
இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு ஆறு ரூபாய் லொட்டரியில் சுமார் 1 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள ஜாய் நகரில் வசித்து வருபவர் பிரபீர் பிரமாணிக்( 61). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு அடிக்கடி லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் இதுவரை லொட்டரி மூலம் ஒரு ரூபாய் கூட சம்பாதித்தது கிடையாது.
இருப்பினும் அவர் லொட்டரி டிக்கெட்டை வாங்குவதை கைவிடவில்லை. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்த இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது.
சமீபத்தில் இவர் வாங்கிய 6 ருபாய் லொட்டரி மூலம் சுமார் 1 கோடி ரூபாய் பரிசு தொகையை வென்றுள்ளார். இதைப்பற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் துளி கூட நம்பவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இவர் லொட்டரி மூலம் வென்ற தொகையை வைத்து சில திட்டங்களை தீட்டியுள்ளார். முதலில் பணம் கைக்கு கிடைத்தவுடன் இருக்கும் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும். பாதியில் நிற்கும் வீட்டின் கட்டமைப்புக்கு ஒரு பெரிய தொகையை ஒதுக்குவதாக கூறியுள்ளார்.
ஒரு கோடி ரூபாய் லொட்டரியில் வென்ற செய்தி ஊர் முழுக்க தெரிந்துவிட்டது. இதனால் பணம் திருடு போகா வாய்ப்பு அதிகமாக உள்ளதால் காவல் துறையிடம் பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்துள்ளார்.