ஜேர்மன் நகரமொன்றில் மாடியிலிருந்து இரண்டு குழந்தைகளை வீசியெறிந்துவிட்டு தானும் குதித்த தாய்: ஒரு பயங்கர சம்பவம்
ஜேர்மன் நகரமொன்றில் தனது இரண்டு குழந்தைகளை மா
ஜேர்மன் மாகாணமான Saarlandஇன் தலைநகரமான Saarbrückenஇல், நேற்று 38 வயது பெண் ஒருவர், தனது மூன்று வயது மகளையும், ஒரு வயது குழந்தையையும் மாடியிலிருந்து வீசியெறிந்துவிட்டு தானும் கீழே குதித்துள்ளார். டியிலிருந்து வீசியெறிந்த தாய், தானும் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பொலிசாருக்குத் தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அவர்கள் மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
ஆனால், அந்தப் பெண்ணின் மூன்று வயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. அந்தப் பெண் கோமா நிலையிலிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் பெண்ணின் ஒரு வயது குழந்தை, கிட்டத்தட்ட எந்த பாதிப்புமின்றி உயிர் பிழைத்துள்ளதாம்.
அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.