லண்டனில் தனது மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்
கிழக்கு லண்டனில் தன் மகளை கேலி செய்து துன்புறுத்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரு தந்தை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிழக்கு லண்டனைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான Jamie Markham (45) என்பவரின் மகளை ஒரு கும்பல் கேலி செய்து துன்புறுத்தி வந்துள்ளது.
அவர்களை Jamie தட்டிக்கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு இளைஞன், திங்கட்கிழமை இரவு அவரது வீட்டின் முன்னால் வைத்தே அவரைக் கத்தியால் குத்தியுள்ளான். அவர் அலறும் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார்.
ஆனால், மருத்துவ உதவிக்குழுவினரால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் CCTV கமெரா காட்சிகளைக் கைப்பற்றியுள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.