பத்தே நிமிடத்தில் 1.5 லிட்டர் கோகோ-கோலா குடித்த இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்! நடந்தது என்ன?
சீனாவில் இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலா குடித்து திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை வாங்கி பத்தே நிமிடத்தில் குடித்து முடித்துள்ளார். இதையடுத்து சில மணி நேரத்தில் அவரது வயிறு உப்புசமாகி வீங்கியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் நேரம் செல்ல செல்ல அவருக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் சாவோயாங் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
அங்கே மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் குடலில் அசாதாரண வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அளவுக்கு அதிகமாக குளிர்பானம் அருந்தியதால் கல்லீரலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உருவாகியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் போதே அந்த இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியாய் ஏற்படுத்தியுள்ளது.
அதிகப்படியான குளிர்பானத்தை பருகி வாயு அடைப்பால் அந்த இளைஞர் தனது வாழ்க்கையை முடித்து கொண்டதாக மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.