செல்பி மோகத்தால்.. சுமார் 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்! பின்னர் நடந்த அதிசியம்
இந்தியாவில் இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சி அருகே செல்வி எடுக்க முயன்ற போது 140 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜேவர்கி பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் சாகர்(30). இவர் தனது 5 நண்பர்களுடன் கர்நாடகாவின் கோகாக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது நீர்வீழ்ச்சி பக்கத்தில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் திடீரென கால் தவறி சுமார் 140 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார்.
அவர் கீழே விழும் போது செல்போனுடன் விழுந்ததால் உடனடியாக தனது நண்பருக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை பற்றி கூறியுள்ளார். இதையடுத்து சமூக ஆர்வலர் ஆயிப் கான் என்பவரது முயற்சியால் பொலிசாரின் உதவியோடு 12 மணி நேரத்தில் பிரதீப் சாகர் மீட்கப்பட்டார்.
சுமார் 140 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அந்த இளைஞர் உயிர் தப்பினார். ஆனால் கீழே விழுந்ததில் அவருக்கு கடும் மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.