திருமணமான 10வது மாதத்தில்.. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
தமிழகத்தின் சேலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்பாபேட்டை அதிகாரிபட்டியை சேர்ந்த கார்திக்கிற்கும் அதே பகுதியை சேர்நத சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தியாவுக்கு வாந்தியுடன் தலை சுற்று ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்கதவை திறந்து சந்தியா வாந்தி எடுப்பதற்காக வந்தபோது திறந்து கிடந்த கால்வாய் நீரில் கால் தவறி கீழே விழுந்தார்.
சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார், விபரம் தெரிந்து விரைந்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவு நீர் கால்வாயை மூடுவதற்கான கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.