நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர்
புடின் ஆதரவாளர் ஒருவர் தொலைக்காட்சியில் நேரடியாக ஜேர்மானிய ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ஊடுருவல் தொடங்கிய நாள் முதற்கொண்டே ரஷ்ய தொலைக்காட்சிகளில் புடின் ஆதரவாளர்கள் பிரித்தானியா முதலான நாடுகளை அணுகுண்டு வீசி அழித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது ஜேர்மன் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர்.
நாங்கள் அனைவரும் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என புடின் ஆதரவாளரான Aleksey Zhuravlyov என்பவர் நேரடியாக தொலைக்காட்சியில் மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Meanwhile in Russia: another normal day on Kremlin-controlled state television.
— Julia Davis (@JuliaDavisNews) August 6, 2022
Appearing on 60 Minutes, State Duma Member Aleksey Zhuravlyov is threatening @BILD reporter in Ukraine @bjoernstritzel and other German journalists: "B***, all of us will come and kill all of you!" pic.twitter.com/XyCFxE4T87
நடந்தது என்னவென்றால், ஜேர்மனி உக்ரைனுக்குக் கொடுத்த தானியங்கி ஆயுதங்களை உக்ரைனியர்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்து ஜேர்மன் ஊடகவியலாளர் ஒருவர் உக்ரைனிலிருந்தவண்ணம் விவரிக்கிறார்.
அந்த காட்சிகளைக் காட்டி Aleksey Zhuravlyovஇடம், ரஷ்ய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் கருத்துக் கேட்கும்போதுதான் அவர் இப்படி அந்த ஜேர்மன் ஊடவியலாளரையும், ஒட்டு மொத்த ஜேர்மன் ஊடகவியலாளர்களையும் கொன்றுவிடுவதாக எச்சரிக்கிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளரே, Aleksey Zhuravlyovஇடம், நீங்கள் கொலை மிரட்டல் விடுக்கிறீர்கள் என எச்சரிக்க, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், அதற்கு என்ன, நான் போகிறேன், அவர்களைக் கொல்லத்தான் போகிறேன் என்கிறார் அவர்.
ஜேர்மன் ஊடகவியளாளர்களை நாசிக்கள் என அழைத்து Aleksey Zhuravlyov கொலை மிரட்டல் விடுத்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.